என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தவறான உறவில் பிறந்த குழந்தை புதரில் வீச்சு- போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த கல்லூரி மாணவி
- 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை அங்குள்ள புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது.
- திருமணத்திற்கு முந்தைய தவறான உறவில் குழந்தை பிறந்ததால் அதனை விட்டுச்சென்றதும் உறுதியானது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில் நேற்று இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டது.
உடனடியாக அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டனர்.
மேலும் இது குறித்து அவர்கள் ஜீயுபுரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் சமூக நலத்துறையை சேர்ந்தவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இங்க்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிக்கப்பட்டது.
இதற்கிடையே பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற மர்மநபர் யார் என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை அங்குள்ள புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது. திருமணத்திற்கு முந்தைய தவறான உறவில் குழந்தை பிறந்ததால் அதனை விட்டுச்சென்றதும் உறுதியானது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த தகவல் அறிந்த கல்லூரி விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்து மயங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழந்தை அனுமதிக்கப்பட்ட அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜீயபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்த குழந்தையை வீசிச்சென்ற மாணவி, போலீசாருக்கு பயந்து விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்