search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் அரசு விடுதியில் திருமணம் ஆகாத கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது
    X

    தருமபுரியில் அரசு விடுதியில் திருமணம் ஆகாத கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது

    • தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர்.
    • குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதை அடுத்து விடுதியின் ஒரு அறையில் பெண் குழந்தையை மாணவி பெற்று எடுத்துள்ளார். இத்தகவல் அறிந்த விடுதி வார்டன் கலைச்செல்வி மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரையும், குழந்தையையும் சேர்த்தனர். இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் அதியமான் கோட்டை போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாகவே தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருந்ததால் கர்ப்பமானதாகவும் மாணவி தெரிவித்தார்.

    மேலும் மாணவியின் வீட்டிற்கு காதலித்து கர்ப்பமானது தெரியாது, கல்லூரியில் சேரும் போது கர்ப்பமாக தான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார். அந்த வாலிபர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

    குழந்தை பிறந்த சம்பவத்தை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை அழைத்து நேரில் பேசினர். அந்த வாலிபர் தான் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

    இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேசினர். இதில் இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இருவரும் ஒரே சமுதாயம் என்பதால் புகார் அளிக்கவில்லை. இதனால் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. மாணவியர் விடுதியில் 120 மாணவிகள் உள்ளனர். வார்டனாக கலைச்செல்வி உள்ளார்.

    இந்த மாணவி கர்ப்பமானது வார்டன் தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

    Next Story
    ×