search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் மாணவி மர்ம மரணம் எதிரொலி: கள்ளக்குறிச்சியில் சி.பி.சி.ஐ.டி. 2-வது நாளாக விசாரணை
    X

    சின்னசேலம் மாணவி மர்ம மரணம் எதிரொலி: கள்ளக்குறிச்சியில் சி.பி.சி.ஐ.டி. 2-வது நாளாக விசாரணை

    • மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.

    இவர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி வந்தனர்.

    அவர்கள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மாணவி உடல் ஐகோர்ட்டு உத்தரவுபடி மறுபிரேத பரிசோதனை இன்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேர் கொண்ட குழுவாக சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யவந்துள்ள டாக்டர்கள் மற்றும் அங்குள்ள நிலவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கலவரம் நடந்த இடம், சூறையாடப்பட்ட பள்ளிக்கு சென்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×