என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே சென்னை பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    திருவள்ளூர் அருகே சென்னை பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் யோகராஜ்.
    • அகிலாவின் தந்தை சொக்கலிங்கம் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் யோகராஜ். வழக்கறிஞர். இவருக்கும் அவரது உறவுக்கார பெண் அகிலா (31) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. அகிலா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.

    நள்ளிரவு ஒரு மணியளவில் அகிலா தூங்க சென்ற அறையில் வெளிச்சமாக இருந்ததால் கணவர் யோகராஜ் சென்று பார்த்துள்ளார். அப்போது மனைவி அகிலா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். ஆனால் அகிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அகிலாவின் தந்தை சொக்கலிங்கம் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாரதி தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×