search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையை கலக்கிய பிரபல கஞ்சா வியாபாரி கைது
    X

    சென்னையை கலக்கிய பிரபல கஞ்சா வியாபாரி கைது

    • போலீசார் ராமலிங்கத்தை கைது செய்து அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    • சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து போலீசாரிடம் சிக்கி கைதானதும் தெரியவந்தது.

    ஆரோவில் அருகே உள்ள பாப்பாஞ்சாவடி கிராமம் குளக்கரையில் வட மாநில தொழிலாளர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததை அறிந்த விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சென்னை வியாசர்பாடி ஹவுசிங் போர்ட் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது 52) பிரபல கஞ்சா வியாபாரி என்பதும், இவர் சென்னையில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து பாப்பாஞ்சாவடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராமலிங்கத்தை கைது செய்து அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    இவர் சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து போலீசாரிடம் சிக்கி கைதானதும் தெரியவந்தது.

    Next Story
    ×