என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து திருட்டு
- நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 32). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு அவரது பொட்டி கடையை மர்ம நபர்கள் உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1,280-யை திருடி விட்டனர். இதுகுறித்து ராமதாஸ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






