என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது
- ஆத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்க்கிடமான 3 வாலிபர்கள் அங்கு நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களை சோதனை செய்தபோது ௩ வாலிபர்களும் கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷ் (வயது 22), சஞ்சய் (21), சிவசக்தி (23) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






