search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதியது: 3 பேர் காயம்
    X

    கடலூர் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதியது: 3 பேர் காயம்

    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    கடலூர்:

    சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் இன்று காலை கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கார் டிரைவரும் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×