search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருநாய்க்கு நடைபெற்ற வளைகாப்பு விழா
    X

    தெருநாய்க்கு நடைபெற்ற வளைகாப்பு விழா

    • நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.
    • நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது.

    தெருநாய்கள் மீது வெறுப்பு காட்டுபவர்களுக்கு மத்தியில், ஒரு தெருநாய்க்கு இளைஞர்கள் சிலர் சேர்ந்து வளைகாப்பு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பரத் சந்திரன் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பெல்லா என்று பெயரிடப்பட்ட தெருநாய் ஒன்று கர்ப்பமான நிலையில் அந்த நாய்க்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து வளைகாப்பு நடத்திய காட்சிகள் உள்ளது.

    அந்த நாய் மீது சாமந்தி மலர்களை பொழிவதையும், பின்னர் நாயின் கழுத்தில் ஒரு சிறிய மாலையை அணிவதையும் காண முடிகிறது. மேலும், வீடியோவை பகிர்ந்துள்ள பரத்சந்திரனின் பதிவில், வெறுப்பு நிறைந்த உலகில் நாங்கள் எங்கள் பெல்லாவுக்கு வளைகாப்பு விழாவை கொண்டாடுகிறோம். அவளுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 2 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×