என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடியில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    ஆவடியில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

    • மாணவர் பாலாஜி பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை வீட்டில் போலீசார் கைப்பற்றினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் பாலாஜி(வயது17). தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை விஜயன் தனது மனைவியுடன் பொங்கல் பண்டிகைக்காக ஜவுளி எடுக்க வெளியில் சென்று விட்டார். வீட்டில் பாலாஜியும், அவரது தங்கையும் இருந்தனர்.

    இந்த நிலையில் அறைக்குள் சென்ற பாலாஜி நீண்டநேரம் ஆகியும் வெளியேவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை பார்த்த போது பாலாஜி தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் புருஷோத்தமன் விசாரணை நடத்தினார். மாணவர் பாலாஜி பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை வீட்டில் போலீசார் கைப்பற்றினர்.

    அதில் அவர், என்னை நீங்கள் நன்றாகத்தான் பார்துக்கொண்டீர்கள். நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பமில்லை. என் வாழ்க்கை என் விருப்பப்படி இல்லை. தங்கையின் வாழ்க்கை யாவது அவளது விருப்பப்படி அமைய வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மாணவர் பாலாஜி நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக வேறு ஒரு மேல் படிப்புக்கும் பாலாஜியை பெற்றோர் வற்புறுத்தி ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து நிர்பந்தித்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×