என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடியில் கியாஸ் கசிவால் திடீர் தீ விபத்து
    X

    ஆவடியில் கியாஸ் கசிவால் திடீர் தீ விபத்து

    • கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது திடீரென தீ பற்றியது.
    • தீயை அணைக்க முயற்சி செய்த வினோத்திற்கு கை மற்றும் தலை முடி ஆகியவை பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    ஆவடி திருமலை ராஜபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் (45) இவர், வீட்டின் கீழ்த் தளத்தில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார்.கடையின் மேலே இவரது முதல் மாடியில் வினோத் மற்றும் அவரது தாய் சாந்தி தேவி (72) வசித்து வருகின்றனர்.

    வினோத்துக்கு திருமணம் ஆகாத நிலையில். இன்று காலை வழக்கம் போல் தன் தாய்க்கு சமையல் செய்ய சமையலறை சென்ற பொழுது எரிவாய் கசிவை கவனிக்கவில்லை. வழக்கம்போல் கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது திடீரென தீ பற்றியது. அதிர்ச்சியடைந்த வினோத் உடனடியாக கீழே இருந்த கோணியை எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். கோணியில் ஈரம் இல்லாததால் கோணியும் திபுதுவென தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்க முயற்சி செய்த வினோத்திற்கு கை மற்றும் தலை முடி ஆகியவை பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் சமையலறை சென்று தீயை அணைத்து பின்னர் வினோத்தை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமையல் செய்ய முற்பட்டபோது கேஸ் கசிவால் வினோத் என்பவர் தீ விபத்தில் சிக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×