என் மலர்
உள்ளூர் செய்திகள்

அத்திப்பட்டு புதுநகரில் பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்து வாலிபர் பலி
- சுரேஷ் திடீரென பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டதால் அவர் மயங்கினார்.
- மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
திருப்பத்தூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது42). லாரி கிளீனர். இவர் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதிக்கு லாரியில் வந்தார். இரவில் லாரியை அங்குள்ள சாலை ஓரம் நிறுத்திவிட்டு டிரைவர் தூங்கினார். கிளீனராக சுரேஷ் அங்குள்ள பக்கிங்காம் கால்வாய் கல்வெட்டு சுவற்றில் படுத்து இருந்தார்.
அப்போது சுரேஷ் திடீரென பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டதால் அவர் மயங்கினார்.
இதில் தண்ணீரில் மூழ்கி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து டிரைவர் வந்து பார்த்தபோது பக்கிங்காம் கால்வாயில் சுரேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






