என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரும்பாக்கம் கிராமத்தில் அனுமதி இன்றி சவுடு மண் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல்
- வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அரும்பாக்கம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தலா 2 யூனிட் அளவு கொண்ட சவுடு மண்ணை ஏற்றிக்கொண்டு வந்த 4 லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த லாரியில் அனுமதி இன்றி சவுடு மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அரும்பாக்கம் கிராமத்தில் அனுமதி இன்றி சவுடு மண் குவாரி நடத்துவதாகவும், அங்கிருந்து சவுடு மண் ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. எனவே போலீசார் சவுடுமண் குவாரியில் இருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் நான்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக சவுடுமண் குவாரி நடத்திய வெற்றிவேல், ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் கீழானூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், லாரி உரிமையாளர்களான வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலு, திருநின்றவூரை சேர்ந்த மோகனகிருஷ்ணன், வீராபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






