search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சியில் கழுத்தை அறுத்து வாலிபரை கொன்ற தொழிலாளி-சிறுவன் கைது
    X

    கல்லிடைக்குறிச்சியில் கழுத்தை அறுத்து வாலிபரை கொன்ற தொழிலாளி-சிறுவன் கைது

    • போலீசார் மாயாண்டியையும், சிறுவனை கைது செய்தனர்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர்கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் பூதத்தான். இவரது மகன் பிரபு(வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

    கல்லிடைக்குறிச்சி புது அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(29). கூலி வேலை பார்க்கும் இவரும், பிரபுவும் நண்பர்கள். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் புதிதாக ஒருவர் கட்டிவரும் வீட்டில் வைத்து மது அருந்தினர். அப்போது மாயாண்டியின் உறவினர் மகன் உள்பட மேலும் 2 சிறுவர்களும் அவர்களுடன் இருந்துள்ளனர்.

    அப்போது மதுபோதையில் இருந்த பிரபுவை சிறுவர்களுடன் சேர்ந்து மாயாண்டி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்றனர். மேலும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதிஷ்குமார் அங்கு வந்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர்கள் பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபு கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பிரபுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அதனை கைவிடுமாறு அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரித்தும், அவர்கள் 2 பேரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மாயாண்டியிடம் தெரிவிக்கவே, அவர் பிரபுவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவரை மது குடிக்க அழைத்து சென்று அதிக அளவில் மது ஊற்றி கொடுத்து அவரை போதையடைய செய்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரபுவை தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாயாண்டியையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×