என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் மெத்தையை கயிறு கட்டி இறக்கிய போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி
- எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நாகராஜ் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
- வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது67).
மெத்தை வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி வேல்முருகன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வரும் மகள் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்தார்.
பரமேஸ்வரி வீட்டின் பக்கத்து பிளாக்கில் உள்ள வீட்டில் வசித்து வரும் நாராயணன் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜிடம் மெத்தை ஒன்று விலைக்கு வாங்கினார்.ஆனால் அந்த மெத்தை அளவு சரியாக இல்லை என்று தெரிகிறது. மேலும் அதனை சரி செய்து தரும்படி அவர் நாகராஜிடம் கூறினார்.
இதையடுத்து நாகராஜ் 3-வது மாடியின் ஜன்னல் பக்கவாட்டு சுவரில் ஏறி நின்றபடியே அருகில் 2-வது தளத்தில் உள்ள நாராயணன் வீட்டில் இருந்து மெத்தையை கயிறு கட்டி இறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நாகராஜ் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்