என் மலர்
உள்ளூர் செய்திகள்

"யுமேஜிங்-சென்னை" அரசு நடத்தும் சர்வதேச கண்காட்சி- கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைச்சர்
- சர்வதேச தொழில் சார்ந்த 40 கருத்தரங்க அமர்வுகளும் நடத்தப்படுகிறது.
- மாணவர்கள் கண்டுபிடித்த பேட்டரி பைக்கை பார்வையிட்டு, அதன் தொழில் நுட்பங்களை கேட்டரிந்து மாணவர்களை பாராட்டினார்.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு அரசின் "ஸ்டார்ட் அப்" என்கின்ற தொழில் நிறுவனம்., மாநிலத்தில் ஒரு நல்ல தொழில் முனைவோருக்கான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்த்து வருகிறது.
துபாய் நாட்டில் நடத்தப்படும் உலகலாவிய நவீன தொழில் நுட்ப முதலீட்டாளர்கள் கண்காட்சி போன்று "யுமாஜின்-சென்னை" என்ற பெயரில் வரும் 23ம் தேதி முதல் 25 வரை சென்னை டிரேட் சென்டரில் நவீன தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது., இதில் 250 சர்வதேச பேச்சாளர்கள், 3000 தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள். சர்வதேச தொழில் சார்ந்த 40 கருத்தரங்க அமர்வுகளும் நடத்தப்படுகிறது.
இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி, பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான சேவை பிரிவுகளை துவக்கி வருகிறது., மாமல்லபுரம் அடுத்த பையணூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஏ.வி.ஐ.டி கல்லூரியில் அதன் நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். பின்னர் அங்கு மாணவர்கள் கண்டுபிடித்த பேட்டரி பைக்கை பார்வையிட்டு, அதன் தொழில் நுட்பங்களை கேட்டரிந்து மாணவர்களை பாராட்டினார். திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, கல்லூரி இயக்குநர் டாக்டர் கணேசன், டாக்டர் அனுராதா, சுரேஷ், சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.