என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததில் ரவுடியின் 2 கைகளும் துண்டானது
    X

    அம்பத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததில் ரவுடியின் 2 கைகளும் துண்டானது

    • நாட்டுவெடி குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
    • நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி கார்த்திக்கின் 2 ககைளும் துண்டானது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக்(38). இவர் மீது தாம்பரம், பள்ளிக்கரணை, செங்கல்பட்டு, பல்லாவரம், உள்பட சென்னையின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் கார்த்திக் தனது கூட்டாளியான அம்பத்தூர், ஒரகடம் பகுதியில் உள்ள விஜயகுமாரின் வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது நாட்டுவெடி குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில் கார்த்திக்கின் இரண்டு கைகள் மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த விஜயகுமாருக்கு காயம் ஏற்பட்டது.

    நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி கார்த்திக்கின் 2 ககைளும் துண்டானது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சோதனைசெய்தபோது அங்கு நாட்டு வெடிகுண்ட தயாரிக்க பயன்படுத்த வைத்திருந்த ரசாயனங்கள், துணி, நூல், வெடிமருந்துகளை கைப்பற்றப்பட்டது.

    கூடுவாஞ்சேரியை சேர்ந்த ரவுடி ஒருவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயத்தில் கார்த்திக் கூட்டாளியுடன் சேர்ந்து நாட்டு வெடி குண்டை தயார் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×