search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் மகன் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
    X

    அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் மகன் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    • முன்னாள் எம்.எல்.ஏ. கே. குப்பன். இவரது இளைய மகன் கே.மோகன். இவர் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
    • மோகன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே. குப்பன். இவரது இளைய மகன் கே.மோகன் (வயது 38). இவர் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், தளவாய் சுந்தரம், மாதவரம் வி.மூர்த்தி, ரமணா, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி. வெங்கடேஷ்பாபு, விருகை வி.என். ரவி, ஆர்.எஸ். ராஜேஷ் உட்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

    திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. குப்பன் இளைய மகனும், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளருமான கே. மோகன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    மகனை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்பு சகோதரர் குப்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மோகன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×