என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே மேம்பாலத்தை அ.தி.மு.க.வினர் ரிப்பன் வெட்டி திறந்ததால் பரபரப்பு- தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம்
    X

    ரெயில்வே மேம்பாலத்தை அ.தி.மு.க.வினர் ரிப்பன் வெட்டி திறந்ததால் பரபரப்பு- தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம்

    • காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • அ.தி.மு.க., தி.மு.க.வினர் மோதலால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கபடும் என்று அறிவித்தனர். அதன்படி இருசக்கர வாகனங்கள் பாலத்தில் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று காலை அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அ.தி.மு.க.வினர் பாலத்தின் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் பாலத்தின் மீது ரிப்பன் கட்டினர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பாலத்தை சீரமைக்க நாங்கள் தான் காரணம்.தற்போது நன்றாக சீரமைக்க வில்லை.பணத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க பிரமுகர்கள் வன்னியராஜா, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் தி.மு.க.வினர் அங்குத் திரண்டு வந்தனர். அவர்கள் எஸ்.ஆர்.கே.அப்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அ.தி.மு.க., தி.மு.க.வினர் மோதலால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இரு தரப்பையும் சமாதானம் செய்து போலீசார் அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×