search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்திற்கு பொங்கல் கொண்டாட வந்த 4-ம் வகுப்பு மாணவி நீச்சல் குளத்தில் மூழ்கி பலி
    X

    மாமல்லபுரத்திற்கு பொங்கல் கொண்டாட வந்த 4-ம் வகுப்பு மாணவி நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

    • மாலையில் தனது 8 வயது பெண் குழந்தை ஜோஸ்னா அமுல்யாவை காணவில்லை என தந்தை தேடினார்.
    • நீச்சல் குளத்தில் குழந்தை மிதப்பதாக ஊழியர்கள் கூறினர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் பிரேம் எட்வின் ராஜன். பொங்கல் விடுமுறை கொண்டாடுவதற்காக நேற்று குடும்பத்துடன் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் சன் ரிசார்ட்டில் தங்கினார். மாலையில் தனது 8 வயது பெண் குழந்தை ஜோஸ்னா அமுல்யாவை காணவில்லை என தேடினார். அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் குழந்தை மிதப்பதாக ஊழியர்கள் கூறினர்.

    பதறியடித்து குழந்தையை தனது காரில் தூக்கிக்கொண்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    ஜோஸ்னா அமுல்யா 4ம் வகுப்பு படித்து வருகிறார். மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×