என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
6-ம் வகுப்பு மாணவியை கட்டிபோட்டு பலாத்காரம்: போக்சோவில் தொழிலாளி கைது
- வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
- போலீசாரின் விசாரணையில் ஆட்டுப்பட்டி ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம்வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் ஈரோட்டில் தங்கி கூலிவேலை செய்துவருகின்றனர்.
நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அதேபகுதியில் உள்ள ஆட்டுபண்ணையில் கூலி வேலை செய்துவரும் நாகப்பன்(வயது55) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. உடனடியாக பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், மகளிர் இன்ஸ்பெக்டர் வள்ளி, காடாம்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் பூவராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர விசாரணை தீவிர நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியில்ஆட்டுப்பட்டி ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்