search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுமுடி அருகே கரும்பு டிராக்டரில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
    X
    பலியான மாணவர்

    பொன் வெற்றி தமிழ்

    கொடுமுடி அருகே கரும்பு டிராக்டரில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி

    • எதிர்பாராதவிதமாக மாணவர் பொன்வெற்றி தமிழ் மீது டிராக்டர் மோதியது. இதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
    • டிராக்டரின் பின்சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்கதிரேசன். தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் வெள்ளக்கோவில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு பொன் வெற்றி தமிழ் (10), பொன் கவின் தமிழ் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். பொன் வெற்றி தமிழ் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், பொன்கவின் தமிழ் ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய பொன் வெற்றி தமிழ் வெங்கமேடு-நாகம நாயக்கன் பாளையம் செல்லும் சாலையில் சைக்கிள்ஓட்டி கொண்டு இருந்தார்.

    அப்போது அந்தவழியாக சங்கர் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் பொன்வெற்றி தமிழ் மீது டிராக்டர் மோதியது. இதில் மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது டிராக்டரின் பின்சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் பொன் வெற்றி தமிழ் உடல்நசுங்கி பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிஓடிய டிராக்டர் டிரைவர் சங்கரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×