என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரி மாவட்டத்துக்கு வனவிலங்கு வேட்டையாட வந்த 5 பேர் அதிரடி கைது
- போலீசார் சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்து பார்த்தனர்.
- காருக்குள் இறைச்சி பதுக்குவதற்காக ஒரு ரகசியஅறை இருப்பது கண்டறியப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூடலூர் சரகத்துக்கு உட்பட்ட ஓவேலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. எனவே அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அந்த காருக்குள் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்து பார்த்தனர். இதில் காருக்குள் இறைச்சி பதுக்குவதற்காக ஒரு ரகசியஅறை இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் விலங்குகளை கொல்வதற்கான கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் சிக்கின. எனவே காருடன் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், மேற்கண்ட 5 பேரையும் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் ஜாம்ஷெர்,ஜோபின், ஜிஜோ ஜான், முகம்மது அனீஸ், ஜிபின் ஜான் என்பது தெரிய வந்தது. எனவே அவர்களிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்து உள்ளன.
கேரளாவை சேர்ந்த ஜாம்ஷெர்,ஜோபின், ஜிஜோ ஜான், முகம்மது அனீஸ், ஜிபின் ஜான் ஆகிய 5 பேரும் காடுகளில் புகுந்து அதிநவீன கருவிகள் உதவியுடன் வன விலங்குகளை வேட்டையாடும் தொழில் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு காரை பயன்படுத்தி வந்து உள்ளனர்.
அந்த காரில் இறைச்சியை பதுக்கி எடுத்து செல்வதற்காக, ஒரு ரகசிய அறை வைக்கப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் தற்செயலாக கண்டுபிடித்து உள்ளோம்.
நீலகிரி காட்டுக்குள் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக காரில் வந்திருந்த 5 பேரையும் வனஊழியர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தி கைது செய்து உள்ளோம். அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக 5 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வனஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்