search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு 5 மாதம் உணவுப்படி நிறுத்தம்
    X

    ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு 5 மாதம் உணவுப்படி நிறுத்தம்

    • ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.
    • கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    திருநின்றவூர்:

    ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. சட்ட ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை என பல்வேறு பிரிவுகளில் 4623 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    போலீசார் அனைவருக்கும் தினமும் ரூ.300 வீதம் 26 நாட்களுக்கு ரூ.7,800 உணவுப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    சென்னை காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு உணவுபடி தொடர்ந்து வழங்கப்படும் நிலையில் அருகில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு நிறுத்தப்பட்டு இருப்பது போலீசார் மத்தியில் வேதனை அடைய செய்து உள்ளது.

    எனவே கடந்த 5 மாதமாக நிறுத்தப்பட்ட உள்ள உணவுப்படி நிலுவைத்ததொகைய முழுவதுமாக உடனடியாக வழங்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×