search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
    X

    ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

    • போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போதை மாத்திரைகள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 10 பேரை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் டேப் பெண்டாடல் ஹைட்ரோ குளோரைடு என்ற போதை தரும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி சரகத்திற்குட்பட்ட மற்ற பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி சமத்துவபுரம் அருகே ராஜதானி போலீசார் சோதனை நடத்திக் கொண்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ராஜதானி பிச்சம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் தினேஷ்குமார் (24), குமாரபுரத்தைச் சேர்ந்த வைரக்குமார் (25), சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த ஜேசுதாசன் (20) மற்றும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மகன் இன்பக்குமார் (19) என தெரிய வந்தது.

    இதில் ஜெகநாதன் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும், இன்பக்குமார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு சக மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் இக்கும்பலுடன் மேலும் சிலர் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ளனர். இவர்கள் எங்கிருந்து இந்த மாத்திரைகளை வாங்கி வந்தனர்? என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×