என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 ½ லட்சம்-38 பவுன் நகை கொள்ளை
- வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு பூட்டு உடைந்த நிலையில் திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுதாகர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 38 பவுன் நகை, மற்றும் திருப்பதி கோவிலுக்கு காணிக்கைக்காக வைத்திருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story






