search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலி
    X

    திருத்தணியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலி

    • தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார்.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப்பேட்டை தங்கச்சாலை தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நாகவல்லி. இவர்களது 3 வயது மகள் நிரஞ்சனா.

    இந்நிலையில் திருத்தணியை அடுத்த புஜ்ஜி ரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ரமேஷ் குடும்பத்துடன் பங்கேற்றார். மேலும் 2 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை புஜ்ஜிரெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்றார்.

    அங்கு சிறுமி நிரஞ்சனா விளையாடிக்கொண்டு இருந்தபோது பக்கத்து வீட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி சிறுமி நிரஞ்சனா பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து சிறுமி நிரஞ்சனாவை பெற்றோர் தேடியபோது அவள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து கிடப்பது தெரிந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த உறவினர்கள் சோகமானார்கள்.

    இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×