என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் 3 கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு- போலீசார் விசாரணை
- 3 கோவிலின் உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- கொள்ளை சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோவில் சாலையில் மேட்டு காளியம்மன் கோவில், முத்து மாரியம்மன் கோவில், ஆயிரத்தெண் விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு மர்மநபர்கள் 3 கோவிலில்கள் வெளிப்பூட்டை உடைத்து கோவில் உள்ளே இருந்த உண்டியல் பூட்டையும் உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையில் வந்த கோவில் பூசாரிகள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சிடைந்தனர்.
உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 கோவிலின் உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






