search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி வாலிபர் பலி- 3 பேர் கைது
    X

    மாமல்லபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி வாலிபர் பலி- 3 பேர் கைது

    • கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
    • மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், டிரைவர் குப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிஷ் (வயது22). இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருடன் வடநெம்மேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 18-ந் தேதி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றார். இருவரும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் வனமுத்து, கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ், டிரைவர் குப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×