என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் மூடிக் கிடக்கும் ரெயில்வே கேட்டை திறக்ககோரி 20 கிராம நிர்வாகிகள் ஊர்வலம்
    X

    திருவொற்றியூரில் மூடிக் கிடக்கும் ரெயில்வே கேட்டை திறக்ககோரி 20 கிராம நிர்வாகிகள் ஊர்வலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அந்த பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது.
    • திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கரன், மற்றும் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் துளசி ராம்ராஜ் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அந்த பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. ஆனாலும் கடந்த ஒரு ஆண்டாக ரெயில்வே கேட் மூடி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடைபெறாத பணிக்காக மூடி இருக்கும் ரெயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தியும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக அகற்றப்பட்ட 17 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தியும் 7-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் கே. கார்த்திக் தலைமையில் 20 கிராம நிர்வாகிகள் ஊர்வலமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றனர். இதில் பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கரன், மற்றும் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் துளசி ராம்ராஜ் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    Next Story
    ×