search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது கிணற்றில் குளித்த 10-ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
    X

    தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது கிணற்றில் குளித்த 10-ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

    • ஆங்கில தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் மாணவர் குளிக்க சென்றார்.
    • ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஏ.எஸ். பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் இளங்கோ (வயது 15). இவர் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள், மாணவன் உடலை மீட்டனர். இதற்கிடையே அங்கு வந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×