search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்லியை ஆளும் தமிழக செங்கோல்
    X

    டெல்லியை ஆளும் தமிழக செங்கோல்

    • திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது.
    • பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய பாரம்பரிய நெறிமுறைகளுடன் அதிகாரப் பரிமாற்ற நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு கேட்க, ஜவஹர்லால் நேரு. மூதறிஞர் ராஜாஜியுடன் ஆலோசனை நடத்தினார். சோழ மன்னர்கள் அதிகார பரிமாற்றத்துக்கு புனித அடையாளமாக செங்கோல் பரிமாற்றம் செய்த அதே பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க ராஜாஜி ஆலோசனை கூறினார்.

    மேலும், ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு 'தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். குருமகா சன்னிதானம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் 'நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத் தினம் பிள்ளையையும் டெல்லிக்கு தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்கள்.

    சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்து திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட் டது. புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீன கர்த்தரான குரு மகாசன்னிதானத்தைப் பார்த்து, அரசு விழாவில் தான் எந்தத் திருமுறைப்பாடல் பாடுவது எனக் கேட்க. 'கோளறு பதிகம் பாடுக' என்று சன்னிதானம் கட்டளையிட்டார்.

    1947 ஆகஸ்ட் 14-ம் நாள் நள்ளிரவில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் முதலில் பெற்றார். செங்கோலுக்குப் புனித நீர் தெளித்து 'ஓதுவா மூர்த்தி, வேயுறு தோளிபங் கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தை 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' என்று முழுமையாகப் பாடி ஆசிர்வதித்து செங்கோலை ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார்.

    திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு பதிகம் குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கப்பட்டது. தமிழில் 'கோள்' என்றால் கிரகம்: 'அறு' என்றால் நீக்குவது. 'கோளறு' என்றால் கிரகங்களின் தீய விளைவுகளை அழித்தல். 'பதிகம்' என்பது பொதுவாக 10 பாடல்களைக் கொண்ட சிவபெருமானை போற்றும் பாடலாகும்.

    பிரிட்டன் அரசர்கள், அரசிகள் முடிசூட்டும் தங்கக் கோளத்தின் மேல் சிலுவை நிறுவப்பட்டுள்ளது. கடவுளின் சக்தி பெறப்படுவதைக் காட்டும்விதமாக 1661-ம் ஆண்டு 2-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்காக பிரிட்டன் ராணியின் சாவரின் ஆர்ப் உருவாக்கப்பட்டது. 363 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இப்படி பல்வேறு நாடுகளின் ஆட்சி அடையாள சின்னம் குறித்தும், சோழ பேரரசு குறித்த தகவல்களும் மத்திய அரசின் விளக்கக்காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×