என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
    X

    செயற்குழு கூட்டம் நடந்தது.

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

    • மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.
    • உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளை செயற்குழு க்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் வட்டாரச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், பொதுக்குழு உறுப்பினர் சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முருகேசன் கலந்துகொண்டு பேசினார்.

    தீர்மானங்களை வட்டார செயலாளர் செல்வசிதம்பரம் வாசித்தார். கூட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் 5-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் வட்டார பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×