என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர் மாவட்ட உடற்பயிற்சி ஆய்வாளர் மாணவனுக்கு சான்றிதழ் வழங்கினார்.
தமிழ்நாடு கபடி அணிக்கு சமுத்திராபட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு
- இவர் மாவட்ட மண்டல அளவிலான பல்வேறு கபடி போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ளார்.
- தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் தீபக்கை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
நத்தம்:
நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் தீபக். இவர் மாவட்ட மண்டல அளவிலான பல்வேறு கபடி போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ளார். அதன் மூலம் அவர் ஏராளமான பரிசுளும், பதக்கங்கள், சான்றிதழ்களையும் பெற்றார். இந்த நிலையில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் 2023 - 24 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கபடி போட்டி விரைவில் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்ளும் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு அணிக்கு வீரர்கள் தேர்வு கரூர் மாவட்டம் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவர் தீபக் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் . இதன் மூலம் அவர் 14 வயதிற்குட்பட்டோருக்கான தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை கரூர் மாவட்ட முதன்மை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வழங்கினார்.
இதனை அடுத்து தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் தீபக்கை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.மேலும் 2024- அடுத்தாண்டு நடைபெறும் தேசிய அளவிலான கபடி போட்டியில் தீபக் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.






