என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் உயர் கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேட்டி
- தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் 88 சதவீதமாகவும், மற்ற மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்கள் உயர் கல்வி கற்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.
- தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய மாநாடு நடைபெற்றது.மாநா ட்டில் சிக்கலான மற்றும் சவாலான பிரசவங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றது. தேசிய அளவிலான மாநா ட்டிற்கு கூட்டமைப்பின் தலைவர் ரிஷிகேஷ் தலைமை தாங்கினார்.
மாநாட்டின் அமைப்பு தலைவர் டாக்டர் ஜோதி சுந்தரம் வரவேற்றார். தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர் சம்பத்குமார், பொதுச் செயலாளர் டாக்டர் மாதுரி படேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய மாநாட்டை தமிழ்நாடு தகவல் தொழி ல்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது-
வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் பெண்களின் முன்னே ற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க ப்பட்டு வருகிறது. ஒரு பெண் கல்வி கற்கவில்லை என்றால் அனைத்தும் வீண். நாடு முன்னேற்ற பாதையில் செல்லாது. ஆனால் தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் 88 சதவீதமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்கள் உயர் கல்வி கற்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.
தற்போது மருத்துவ துறையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் மருத்துவத்துறை தொழில்நு ட்பத்தில் சிறந்து விளங்கி வருகிறது.
ரோபோடிக் அறுவை சிகிச்சை முறைகளும் எளிமையாக செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் பங்குபெற்ற டாக்டர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வெளியிட்டனர். டாக்டர் கல்பனா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்