என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கிய காட்சி.
மகளிர் நலன் காப்பதில் தமிழக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேச்சு
- 2000 மகளிருக்கு வங்கி அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது.
- வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
தருமபுரி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இவ்விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமை தாங்கி பேசினார்.
இவ்விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறிய தாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப் பாக செயல்படுத்தி வருகின்றார். மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டு வதில் எப்போதும் தமிழக அரசு அக்கறை செலுத்து வதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிடும் அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் அண்ணா பிறந்தநாளான நேற்று தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமாகவும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகை யில், மகளிருக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தருமபுரி மாவட் டத்தில் இவ்விழாவின் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தருமபுரி மற்றும் நல்லம் பள்ளி வருவாய் வட்டத்தை சார்ந்த 2000 மகளிருக்கு இன்றைய தினம் வங்கி பற்று அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,92,385 விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெற்று பரிசீலிக்கப்பட்டு, தற்போது குடும்பதலை விகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
கருணாநிதி மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% தனி இடஒதுக்கீட்டினை உருவாக்கி தந்தார்கள். அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர் நலன் காக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலும் மகளிர் கட்டணமில்லாமல் நகரபேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் வண்ணம் பயணம் திட்டத்தையும், உயர்கல்வி பயிலும் மாணவி களுக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதன்முதலாக தொடங்கி வைத்தார்.
இதே போல் தருமபுரி மாவட்டத்தில் தான் டாக்டர் கலைஞரால் முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது. தற்போது தருமபுரி மாவட் டத்தில் 14.105 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,69,254 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடந்த ஆண்டு 21.048 மகளிர் பயனடையும் வகை யில் ரூபாய் 116.96 கோடி கடன் உதவி வழங்கப் பட்டுள்ளது. மேலும், பல்வேறு வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, முன் னாள் அமைச்சர் பழனி யப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், மாநில கைம் பெண் மற்றும் ஆதரவற்றோர் நலவாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாது சண்முகம், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா உள்ளிட்ட உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டனர்.






