என் மலர்
உள்ளூர் செய்திகள்

தளி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு
- மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
- இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) முதல் நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் மாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இணைதளத்தில் பதிவுச் செய்யாத மாணவ, மாணவிகளும் கல்லூரியில் நேரடியாக வந்து சேர்க்கைக்கான விண்ணப்பம் பெற்று, கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






