search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை அரசு பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலிகள்
    X

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை அரசு பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலிகள்

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, நாற்காலிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேசை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கி பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அரசு மேல்நிலைப் பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படிக்கிறார்கள்.

    இங்குள்ள பல வகுப்பறை களில் மாண வர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலி களை வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக் குமாரிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர்.

    அதன்படி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, நாற்காலிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேசை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் மகேந்திரன், வேடியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாராயணசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் நாராயணகுமார், முன்னாள் கவுன்சிலர் ரவி, வங்கித் தலைவர் சின்னசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கிளை செயலாளர்கள் மாரி, ராமமூர்த்தி, மோகன், பாசறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×