என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஊஞ்சல் திருவிழா
- ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் ஊஞ்சல் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
- கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பால் குறட்டில் ஊஞ்சலில் எழுந்தருளினார்.
தென்திருப்பேரை:
தமிழக கோவில்களில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணம் ஊஞ்சல் திருவிழா நடைபெறும். நவ திருப்பதியில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளபிரான் கோவிலில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் ஊஞ்சல் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது.நேற்று காலை விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்யல் கோஷ்டி நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, சுவாமி கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பால் குறட்டில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை, நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு நாராயணன், ராமானுஜன், சீனு, அத்யாபகர்கள் சீனிவாசன், பார்த்தசாரதி, சீனிவாச தாத்தம், வைகுண்ட ராமன், ஜெகநாதன் நாலாயிர திவ்ய பிரபந்தம் கூறினர். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, ஸ்தலத்தார்கள் ராஜப்பா, வெங்கடாச்சாரி, சீனிவாசன், திருவிழா உபயதார் இசக்கி முத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.






