என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி செல்லா மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு
    X

    பள்ளி செல்லா மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு

    • மாணவர்கள் கணக்கெடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு சீருடை, புத்தகப்பை, தூய்மை பொருட்கள் வழங்கப்பட்டது

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற, இடம்பெயர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கணக்கெடுப்பு பணிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்படி நடைபெற்று வருகிறது.

    பெரியகுத்தி பாலா குடியிருப்பு பகுதியில் களப்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் குமார், வைத்தியநாதன், சங்கரன் மற்றும் ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்கள் கணக்கெடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதில் பள்ளியில் இடைநின்ற மாணவி பானுபிரியாவை கண்டறிந்து மாணவியை மேற்பார்வையாளர், வார்டன் தனலட்சுமி உதவியோடு கே.ஜி.பி.வி. பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

    பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு சீருடை, புத்தகப்பை, தூய்மை பொருட்கள் வழங்கப்பட்டது. இடைநின்ற மாணவர்கள் கல்வி தொடர வேண்டும். கல்வி இல்லை என்றால் உலகம் இல்லை என விழிப்புணர்வு எற்படுத்தி கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

    Next Story
    ×