search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தசரா திருவிழாவை முன்னிட்டு பாளை எருமை கிடா மைதானத்தில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம் -ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    • மின்னொளியில் 11 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரத வீதிகளிலும் வலம் வந்தன.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா குலசேகரன்பட்டினம் தசராவுக்கு அடுத்து தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிக விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடா்ந்து பாளையில் அமைந்துள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 11 கோவில்களிலும் திரு விழா தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற நவராத்திாி தசரா திருவிழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்றது. 10-ம் திருநாளான விஜயதசமியையொட்டி இரவு அம்மன் கோவில்களில் இருந்து சிம்ம வாகனத்தில் போா்க்கோலம் புரிந்து வண்ண மின்னொளியில் 11 சப்பரங்கள் நள்ளிரவு 8 ரத வீதிகளிலும் வலம் வந்தன. இதன் காரணமாக பாளை பகுதி முழுவதும் விழா கோலமாக இருந்தது.

    தொடர்ந்து 11 சப்பரங்க ளும் வீதி உலா வந்த பின்னர் எருமைக்கிடா மைதானத்தில் நள்ளிரவில் அணிவகுத்து நின்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று அதிகாலையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரத்தம்மன் மகிஷா சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர். முன்னதாக நேற்று இரவு முதல் பாளை சமாதானபுரம் பகுதியில் இருந்து வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

    Next Story
    ×