search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு
    X

    புதிய கமிஷனர் முகம்மது சம்சுதீனுக்கு நகராட்சி தலைவர் வள்ளி முருகன் வாழ்த்து தெரிவித்த காட்சி.

    சுரண்டை நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

    • சுரண்டை நகராட்சி கமிஷனர் ஆக பணியாற்றிய லெனின் கடந்த ஜூன் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • சுரண்டை நகராட்சி புதிய கமிஷனராக முகம்மது சம்சுதீன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி கமிஷனர் ஆக பணியாற்றிய லெனின் கடந்த ஜூன் மாதம் பத்மநாதபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தென்காசி கமிஷனர் பாரி ஜான் பொறுப்பு கமிஷனராக பணியாற்றினார்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம்,திருமுருகன் பூண்டியில் கமிஷனர் ஆக பணியாற்றிய முகம்மது சம்சுதீன் சுரண்டை நகராட்சி கமிஷனராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முகமது சம்சுதீன் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவருக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், அன்னப்பிரகாசம், சங்கரநயினார், கோமதிநாயகம், நகர் மன்ற உறுப்பினர்கள் சாந்தி தேவேந்திரன், அமுதா சந்திரன், உஷா பிரபு, வேல்முருகன், பரமசிவன், சிவசண்முக ஞானலட்சுமி,செல்வி, கல்பனா அண்ணபிரகாசம், ராமலட்சுமி கணேசன்,அந்தோணி சுதா ஜேம்ஸ், தி.மு.க. நகர இளைஞரணி முல்லை கண்ணன் ராஜா, டான் கணேசன்,சமூக ஆர்வலர் கார்த்திக் மற்றும் தொழிலதிபர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×