search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து மேஸ்திரி சாவு
    X

    பாம்பு கடித்து மேஸ்திரி சாவு

    • கோகுல் நகரில் உள்ள ஒரு ஏரி அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). கட்டிட மேஸ்திரி. இவர் ஓசூரில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது அவர் கோகுல் நகரில் உள்ள ஒரு ஏரி அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×