search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை  குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு
    X

    பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு

    • அம்மாபேட்டை பகுதியில் உள்ள அய்யாசாமி பார்க்கில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து பஞ்சாமிர்தத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அக்கமாகுளம் அடுத்த நாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி . இவரது மகன் பஞ்சாமிருதம் (வயது 26). டிரைவர்.

    பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

    இவர் சேலம் தாதகாப்பட்டியில் வசித்து வரும் தனது சகோதரர் காளிமுத்து என்பவருடன் தங்கியிருந்து சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் பஞ்சாமிர்தம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள அய்யாசாமி பார்க்கில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென பரவியது. உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் பஞ்சாமிர்தம் வலியால் அலறி துடித்தபடி அங்கும், இங்குமாக ஓடினார்.

    அந்த வழியாக சென்றவர்கள், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதட்டத்தில் கூச்சலிட்டு அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து பஞ்சாமிர்தத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பரிதாபமாக இறந்தார்

    இதை அறிந்த சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண்.2 நீதிபதி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று பஞ்சாமிர்தமிடம் வாக்குமூலம் வாங்கினார்.

    இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பஞ்சாமிர்தம் இன்று காலை 6.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விசாரணை

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஞ்சாமிர்தம் குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்ததாக போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ேவறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×