search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு விவசாயிகள் புதிய ரகங்களை பயிரிட்டு அதிக லாபம் பெற வேண்டுகோள்
    X

    கரும்பு விவசாயிகள் புதிய ரகங்களை பயிரிட்டு அதிக லாபம் பெற வேண்டுகோள்

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 532 டன் கரும்பு அறவை செய்யப்பட்டது.
    • அறவை செய்யப்பட்ட கரும்பிற்கு முழு கிரைய தொகையும், பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.

    நாமக்கல்:

    மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 532 டன் கரும்பு அறவை செய்யப்பட்டது. அறவை செய்யப்பட்ட கரும்பிற்கு முழு கிரைய தொகையும், பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.

    வருகிற 2023-24-ம் ஆண்டு கரும்பு அறவைப் பருவத்திற்கு 7 ஆயிரம் ஏக்கர் நடவு மற்றும் 3,500 ஏக்கர் மறுதாம்பு ஆக மொத்தம் 10 ஆயிரத்து 500 ஏக்கர் கரும்பு, ஆலை அங்கத்தினர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 4 லட்சத்து 30 ஆயிரம் டன் கரும்பு அறவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பருவ மழையின் காரணமாக தண்ணீர் வசதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், புதிய நடவு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8,500 மதிப்பிலான விதைக்கரணை மானியமாக பெற்றுக் கொள்ளலாம்.

    புதிய மற்றும் உயர் விளைச்சல் ரகங்களான கோ 86032, கோ 11015, சி.ஓ.சி., 13339 மற்றும் சி.ஓ.வி. 09356 கரும்பு ரகங்களை நடவு செய்து அதிக விளைச்சல் பெறுவதுடன், சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தி அதற்கான உரிய ஆதார விலையையும் பெறலாம்.

    மேற்கண்ட புதிய ரகங்கள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத் தொகையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் எந்திர அறுவடைக்கு ஏற்றவாறு நடவு செய்து அதிக லாபம் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்ட கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×