search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு மலையில் திடீர் தீ விபத்து
    X

    மலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு படையினர் அணைத்த காட்சி.

    திருச்செங்கோடு மலையில் திடீர் தீ விபத்து

    • திருச்செங்கோடு மலையில் சில இடங்களில் நேற்று புகை மூட்டம் தென்பட்டது.
    • தீயணைப்பு படையினர் தீ பிடித்த பகுதிகளில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு மலையில் சில இடங்களில் நேற்று புகை மூட்டம் தென்பட்டது. இதையடுத்து திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் ரமணி காந்தன், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் திருச்செங்கோடு மலைக்கு விரைந்து பார்த்தபோது அந்த பகுதியில் தீ பிடித்து எர்நிதது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் தீ பிடித்த பகுதிகளில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்ததை அறிந்து துரிதமாக செயல்பட்ட கோவில் நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.கோடைக்காலத்தில் குப்பைகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை பக்தர்கள் பொதுமக்கள் மலைப்பகுதி யில் பற்ற வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட

    னர்.

    Next Story
    ×