search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும்  வெளி மாவட்ட மாணவிகளுக்கு விடுதியில்  இடம் கிடைக்காததால் வேதனை
    X

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்களுடன் மனு கொடுக்க வந்த மாணவிகள்.

    பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் வெளி மாவட்ட மாணவிகளுக்கு விடுதியில் இடம் கிடைக்காததால் வேதனை

    • இந்த மாணவிகளுக்கு அரசு விடுதியில் தங்கி படிக்க இடம் கிடைக்கவில்லை.
    • விடுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களும் நிறைந்துவிட்டது.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனப்பள்ளியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவிகளும் படித்து வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் படிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் சிலருக்கு, அரசு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டில் தங்களது கல்வியை கைவிடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று 30-க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களது பெற்றோருடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதுநாடு, திருவண்ணமலை மாவட்டம் பீமாரப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த எஸ்.டி, எஸ்.சி. மற்றும் எம்.பி.சி. வகுப்பை சேர்ந்த மாணவிகள் 30-க்கும் மே ற்பட்டவர்கள், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு அரசு விடுதியில் தங்கி படிக்க இடம் கிடைக்கவில்லை.

    விடுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களும் நிறைந்துவிட்டது. தற்போது மாணவிகள் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, விடுதியில் கூடுதலாக மாணவிகள் தங்க தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இல்லாவிட்டால், இந்த ஆண்டில் மாணவிகள் கல்வியை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×