search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாணார்பட்டியில் போக்குவரத்துக்கு பயனற்ற அரசு பஸ்சால் மாணவர்கள் அவதி
    X

    பழுதாகி நின்ற அரசு பஸ்.

    சாணார்பட்டியில் போக்குவரத்துக்கு பயனற்ற அரசு பஸ்சால் மாணவர்கள் அவதி

    • திண்டுக்கல்லில் இருந்து மொட்டயகவுண்டன்பட்டி வரக்கூடிய அரசு பஸ் அடிக்கடி பழுதாகிறது என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நல்ல நிலையில் இயங்ககூடிய அரசு பஸ்ஸை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே மொட்டைய கவுண்டன்பட்டி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.திண்டுக்கல்லில் இருந்து வரக்கூடிய அரசு பஸ் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கடந்த சில தினங்களாக திண்டுக்கல்லில் இருந்து மொட்டையை கவுண்டன்பட்டி கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பஸ் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. இதேபோல் இன்று காலையும் திண்டுக்கல்லில் இருந்து 8:30 மணிக்கு மொட்டைய கவுண்டம்பட்டி வந்த அரசு பஸ் திடீரென பழுதாகி நின்றது.

    இதனால் இந்தப் பகுதியில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லக்கூடிய பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் மிகவும் சிரமம் அடைந்து ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்றனர்.

    இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூறுகையில் எங்கள் பகுதிக்கு அரசு பஸ் இல்லை என அதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததின் பேரில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இருக்கு ஆனால் இல்லை என்ற வார்த்தை கேற்ப அந்த அரசு பஸ்சும் அடிக்கடி பழுதாகி விடுவதால், மாணவ மாணவிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    ஆகவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மொட்டைய கவுண்டன்பட்டிக்கு நல்ல நிலையில் இயங்ககூடிய அரசு பஸ்ஸை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×