search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் விடிய விடிய மழை விடுமுறை அறிவிப்பதில் குளறுபடியால் மாணவ-மாணவிகள் தவிப்பு
    X

    கொடைக்கானலில் இன்று குடைபிடித்தபடி பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள்.

    கொடைக்கானலில் விடிய விடிய மழை விடுமுறை அறிவிப்பதில் குளறுபடியால் மாணவ-மாணவிகள் தவிப்பு

    • கொடைக்கானலில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இன்று காலையிலும் சாரல்மழை பெய்தவண்ணம் இருந்தது.
    • கொடைக்கானலில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது மாணவ-மாணவிகளை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கொடைக்கானலில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இன்று காலையிலும் சாரல்மழை பெய்தவண்ணம் இருந்தது.

    தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் பள்ளிக்கு சென்றனர். கொடைக்கானலில் எப்போது மழைபெய்யும், எப்போது நிற்கும் என்று தெரியாத நிலையில் பள்ளிகளுக்கு சென்றபிறகும் மழை பெய்தபடி இருந்தது.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்க முயன்றபோது அவர் அலைபேசியை எடுக்கவில்லை. கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கேட்டபோது காலை 6 மணிமுதல் 7 மணிவரை மழை பெய்தால்மட்டுமே விடுமுறை விடமுடியும். கொடைக்கானலில் அதுபோன்ற சூழல் தற்போது இல்லை.

    எனவே விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அறிவிக்கப்படவில்லை என்றார். வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது.

    இருந்தபோதும் கொடைக்கானலில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது மாணவ-மாணவிகளை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது.

    எனவே கொடைக்கானலில் மாணவர்களின் நலன்கருதி மழைக்காலங்களில் உரிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என பெற்றோர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×