search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர் அருகே சேறும் சகதியுமான சாலையால் மாணவர்கள் அவதி
    X

    சேறும் சகதியுமான சாலையில் சிரமப்பட்டு செல்லும் மாணவ-மாணவிகள்.

    அய்யலூர் அருகே சேறும் சகதியுமான சாலையால் மாணவர்கள் அவதி

    • பள்ளி செல்லும் சாலையில் சேறும் சகதியு மாக மாறி அவ்வழியாக சென்று வர மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். கொல்லன்குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே கிணற்றுபட்டியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பாலா தோட்டம், களத்து ப்பட்டி, கணவாய்ப்பட்டி, தொட்டியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ-மாணவி கள் படித்து வருகின்றனர்.

    இதன் அருகேயே அங்க ன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் சாலை அருகே கொல்லன்குளம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த குளம் நிரம்பி சாலை யில் தண்ணீர் தேங்குகிறது.

    இதனால் சேறும் சகதியு மாக மாறி அவ்வழியாக சென்று வர மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகளும் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியா மல் தவித்து வருகின்றனர்.

    எனவே இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். கொல்லன்குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×